தமிழ்நாடு

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வலுப்படுத்த வேண்டும்?-கவுன்சிலர்களிடம் ராகுல் பேச்சு

Sinekadhara

காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் கட்டமைக்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் கட்சியை வலுவாக உருவாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்திபவனில் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தேடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் முன்பு ராகுல்காந்தி உரையாற்றினார். கொள்கை மாறாமல், சமரசத்துக்கு இடமளிக்காமல் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கூறினார். நிகழ்ச்சியின் போது, கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரண்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.