தமிழ்நாடு

தென்காசி: கல்லூரி முதல்வருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Sinekadhara

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அதில் மாணவர்களுக்கும் கல்லூரி முதல்வருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கல்லூரிக்கு திரும்பிய பேராசிரியரை மீண்டும் 2 மாதங்கள் கழித்து பணியிடை நீக்கம் செய்ததால் படிப்பு பாதிக்கப்படுவதாகக்கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.