தமிழ்நாடு

முதியவர்களை கொல்லும் சைக்கோ கொலையாளி - சிசிடிவி காட்சி மூலம் விசாரணை தீவிரம்

webteam

சேலத்தில் ஆதரவற்ற முதியவர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரங்களில் சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர்கள் இரண்டு பேர் அடுத்தடுத்த நாளில் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நேற்று இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஆதரவற்ற முதியவர்கள் தலையில் கல்லை போட்டு வாலிபர் ஒருவர் கொலை செய்யும் அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.