தமிழ்நாடு

புரெவி புயல்: இன்று மாலை 7 மணி முதல் கொடைக்கானல் வாகன போக்குவரத்து நிறுத்தம்

kaleelrahman

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும், இன்று மாலை 7 மணி முதல் நிறுத்தப்படுகிறது.

புரெவி புயல் கரையை கடக்க இருக்கும் நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகளை நிறுத்த இருப்பதாக சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


அதன்படி இன்று மாலை 7 மணி முதல் பேருந்துகள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் என அனைத்து வாகனங்களும், மறு அறிவிப்பு வரும்வரை, வத்தலக்குண்டு, பழனி மற்றும் அடுக்கம் சாலைகளில் பயணிக்க தடை விதித்து, சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.