தமிழ்நாடு

பொறியாளர் மீது கொலைவெறி தாக்குதல்: சிசிடிவி காட்சி

webteam

புதுச்சேரியில் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் மீது 4 பேர் கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி செல்லபெருமாள்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (54). புதுச்சேரி அரசுப் பொதுப் பணித்துறையில் இளநிலை பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 9-ஆம் தேதி பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் செல்வராஜ் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது சக்திநகர் பகுதியில் சென்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது.

பின்பு அந்தக் கும்பல், ஆயுதங்களால் செல்வராஜை சரமாரியாக தாக்கியது. இதில் அவருக்கு தலை, கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்பு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. சாலையில் மயங்கி கிடந்த செல்வராஜை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்நிலையில் பொறியாளரை மர்ம கும்பல் ஆயுதங்களால் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைக் கொண்டு போலீசார் வீசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.