புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குச் சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாகக் கூறி 2 விசைப்படகுகளையும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். மீனவர்களையும் படகுகளையும் காங்கேசம் துறைமுகத்துக்கு கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 26 மீனவர்கள் இலங்கையால் கைதுசெய்யப்பட்டிருக்கும் சூழலில் தற்போது மேலும் 12 பேர் சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே, கைதுசெய்யப்பட்ட மீனவர்களை மீட்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.