தனது இரு மகன்களும் இருமொழிக் கொள்கையிலேயே பயின்றதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய நிலையில், அவரது மகன்கள் எத்தனை மொழிகளை பயின்றதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், மதுரையில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் அதற்கு பதிலளித்துப் பேசிய பழனிவேல் தியாகராஜன், தனது மகன்கள் பள்ளிப்படிப்பை இருமொழிக் கொள்கையிலேயே படித்ததாகவும், இந்தி முன்னிறுத்தப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் திட்டவட்டமாக கூறினார்.