தமிழ்நாடு

தமிழக சுற்றுலா தலங்களை தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தும் திட்டம்: அமைச்சர் மதிவேந்தன்

Veeramani

தமிழக சுற்றுலா தலங்களை தனியார் பங்களிப்புடன் மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க சுற்றுலாத் துறை தயாராக உள்ளதாகவும், அவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலா மறுமலர்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற சுற்றுலா மேம்பாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசியபோது இதனைத் தெரிவித்தார். கொரோனா தொற்றால், சுற்றுலா தலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றுலாவை நம்பி உள்ள பலர் கடும் பொருளாதார இழப்பை சந்தித்திருக்கும் நிலையில், சுற்றுலா தளங்களை பழைய நிலைக்கு மீட்டெடுத்து அதன் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், சுற்றுலா தகவல்கள் அடங்கிய கையேட்டினை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.