தமிழ்நாடு

தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

sharpana

"கொரோனா சூழல் காரணமாக, நடப்பு கல்வியாண்டில் தனியார் பள்ளிகள் நீதிமன்ற வழிகாட்டுதல்படி 75 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும்" என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கரூரில் மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதைத் தெரிவித்தார்.