தமிழ்நாடு

தனியார் பேருந்தில் திடீர் தீவிபத்து : உறங்கிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு

webteam

தேனி அருகே தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தால் உறங்கிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே செழிமடை எனும் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து முழுவதுமாக பற்றி எரிந்தது.

பேருந்து எரிவதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் மண்ணை போட்டும், தண்ணீர் ஊற்றியும் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கட்டப்பனை தீயணைப்பு துறையினர், விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் பேருந்தினுள் உறங்கிக் கொண்டிருந்த, க்ளீனராக வேலைபார்க்கும் வண்டிப்பெரியார் மிளாமலை பகுதியை சேர்ந்த ராஜன் என்ற வாலிபர் உடல்கருகி உயிரிழந்தார். இதுகுறித்து கேரள குமுளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தின் பேட்டரி மின்கசிவால் தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.