தமிழ்நாடு

புழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி ! வைரலாகும் வீடியோ

புழல் சிறையில் 'கமகமக்கும்' பிரியாணி ! வைரலாகும் வீடியோ

webteam

புழல் சிறை வளாகத்தில் தண்டனை கைதிகள் பிரிவில் உள்ள சமையலறையில், கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் சிறையில், விசாரணைக் கைதிகள், தண்டனைக் கைதிகள் மற்றும் பெண்களுக்கென தனித்தனி பிரிவுகள் உள்ளன. தண்டனை பிரிவில் உள்ள சமையலறையில், கைதிகள் காய்கறிகளை நறுக்கி பிரியாணி சமைக்க தயார் செய்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. புழல் சிறையில் கைதிகள் சொகுசு வசதிகளுடன் இருப்பதைப் போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரியாணி சமைக்கும் இந்த வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறைக்கு விளக்கமளித்த சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா, சிறையில் ஆய்வு மேற்கொண்டு உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில், 18 டி.வி.க்கள், ரேடியோ, செல்போன்கள், கட்டில்கள், சிம்கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.