தமிழ்நாடு

தனி விமானம் மூலம் கோவை வந்தார் பிரதமர் மோடி - வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு

webteam

அரசு சார்பில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் பாஜக பரப்புரைக்கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி கோவை வந்தார். சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் கோவை வந்த பிரதமருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். அங்கிருந்து காரில் பிரதமர் மோடி பயணித்து வருகிறார். வழி நெடுகிலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.12,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். மேலும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை முதல்முறையாக பிரதமர் மோடி மேற்கொள்கிறார்.