கடந்த 26ம் தேதி நடிகர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.
இந்நிலையில், அவரது பூத உடல், கோயம்பேட்டிலுள்ள அவரது அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் பூத உடலைப்பார்த்த அவரது மனைவி பிரேமலதா கண்கலங்கி நின்றது பார்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. அருகில் இருந்த அவரது இரு மகன்களும் கண்ணீர்விட்டு அழுதனர்.