மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்பாக அதிமுகவுடன் மனகசப்பு எதுவும் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேமுதிக பொதுக்கூட்டத்திற்கு செல்ல மதுரை விமான நிலையம் வந்த பிரேமலதா விஜயகாந்த்க்கு அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்த கேள்விக்கு முறையான அறிவிப்பு வரும் என்றார்.