தமிழ்நாடு

பாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்

பாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி - பூந்தமல்லி அருகே சோகம்

webteam

பூந்தமல்லி அருகே பாம்பு கடித்து கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன்(27). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா(22). இவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. நேற்றிரவு அவரது கணவர் வெளியே சென்றிருந்தார். 

அப்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பா வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரைத் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் புஷ்பா பாம்பு கடித்து உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் பாம்பு கடித்து கர்ப்பிணி உயிரிழந்தது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.