தமிழ்நாடு

பொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி

webteam

பொங்கல் பரிசாக அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும். ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, திராட்சை, அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.