பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆவணங்கள் தெளிவில்லாமல் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சபரிராஜன், திருநாவுக்கரசு ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை ஆட்சியர் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தார்