தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் இதுவரை 418 பேர் வேட்புமனுத்தாக்கல்

JustinDurai

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக, அரசியல் கட்சியினர் வேட்புமனுத்தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் போட்டியிடுவதற்காக நேற்று வரை மொத்தம் 418 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆண்கள் 241 பேர் பெண்கள் 177 பேர். பிரதான அரசியல் கட்சிகள் சார்பில் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்படும் நிலையில் இன்றும் நாளையும் வேட்புமனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனுத்தாக்கல் செய்ய வருபவர்கள் கூட்டமாக வரக்கூடாது எனவும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: திமுகவின் 9வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு