தமிழ்நாடு

நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி - அடையாற்றின் கரையோர மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Sinekadhara

அடையாறு ஆற்றின்  கரையோர மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் அடையாற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குன்றத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மக்களை வீடுவீடாக சென்று போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

நிரம்பி வரும் செம்பரம்பாக்கம் ஏரியை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என அம்பத்தூர் துணை ஆணையர் தீபா சத்யன் தகவல் கொடுத்துள்ளார்.

முன்னதாக, “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள நீரை அளவுடன் திறந்தித்துவிட உத்தரவிடுங்கள்” என முதல்வர் பழனிசாமிக்கு நடிகர் விஜயகுமார் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.