சென்னையில் தங்கும் விடுதிகளில் சோதனை நடத்த காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தங்கும் விடுதிகளில் சமூக விரோதிகள், குற்றப்பின்னணி உள்ள நபர்கள் இருக்கிறார்களா என்று சோதனை நடத்த காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.சந்தேகத்திற்குரியவர்கள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக விரோதிகள், குற்றப்பின்னணி உள்ளவர்கள் விடுதிகளில் இருந்தால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தங்கும் விடுதிகளில் உள்ளவர்களின் விவரங்களை கேட்டுப்பெற விடுதி உரிமையாளர்களுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.