காவல்துறையினர் வரதட்சணை, பரிசுப்பொருட்கள் வாங்கக் கூடாது என அனைத்துக் காவல்துறையினருக்கும்,டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுற்றறிக்கை ஒன்றினை காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பரிசுப்பொருட்கள், வரதட்சணை வாங்கக் கூடாது என்பதோடு, பூங்கொத்துகள் பரிமாறிக்கொள்ளக் கூடாது என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.