தமிழ்நாடு

புதுக்கோட்டை: சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை - ஆடு திருடும் கும்பல் செய்த கொடூரம்

கலிலுல்லா

புதுக்கோட்டையில் காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஎஸ்பிகள் சிவசுப்பிரமணியன், அருண்மொழிஅரசு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ஆடு திருட்டை தடுக்கச் சென்ற திருச்சி மாவட்டம் நாவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 2 எஸ்.ஐக்கள் உள்ளடங்கிய 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.