தமிழ்நாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - 5 தனிப்படை அமைப்பு

கலிலுல்லா

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக எஸ்டேட் மேலாளரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, உதகையில் உள்ள பழைய காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், நீலகிரி எஸ்.பி ஆஷிஷ் ராவத் ஆகியோர் 1 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி நடைபெற்றுவரும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என கூறப்படுகிறது.கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிப்படையிலும் தலா 5 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 போலீசாரை கொண்டு ஒவ்வொரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.