தமிழ்நாடு

சிவகங்கை: பேருந்து மோதி காவலர் பலி - பணி முடிந்து வீடு திரும்பிய போது நேர்ந்த துயரம்

Sinekadhara

பேரிடர் மேலாண்மை குழுவில் பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வந்த காவலர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் காவலர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

சிவகங்கை மாவட்டம் இளமனூரைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் சாலைக்கிராம காவல் நிலையத்தில் இரண்டாம்நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு வயது மற்றும் நான்கு வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சிவகங்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பேரிடர் மேலாண்மை குழுவில் தனது பணியை முடித்துவிட்டு, இளையான்குடி அருகே உள்ள திருவேங்கடம் அருகே சுரேஷ் வந்துகொண்டிருந்தபோது, எதிரே பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசுப் பேருந்து அவரது இருசக்கர வாகனம் மோதியதில் காவலர் சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவரது உடலை கைப்பற்றிய இளையாங்குடி காவல்துறையினர் உடல்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.