தமிழ்நாடு

சென்னை: ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் நூதன மோசடி; சிம் ஆக்டிவேட் செய்வதாக ரூ.85,000 திருட்டு

JustinDurai

சிம் ஆக்டிவேஷன் செய்வதாக கூறி நூதன முறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்த 85 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர் புதிய சிம்கார்டு ஒன்றை வாங்கியுள்ளார். அதை ஆக்டிவேட் செய்ய வேண்டுமென்றால், தாங்கள் அனுப்பக்கூடிய லிங்கிற்குள் சென்று 10 ரூபாய் செலுத்த வேண்டும் என ஒருவர் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாலன், 10 ரூபாய் அனுப்பியவுடன், பாலனின் எஸ்.பி.ஐ. வங்கிக் கணக்கிலிருந்து 86,500 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூதன முறையில் 85 ஆயிரம் ரூபாயை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.