தமிழ்நாடு

வெறிச்சோடியது போயஸ் கார்டன்; பாதுகாப்பும் திரும்பப் பெறப்பட்டது

webteam

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கியதை அடுத்து போயஸ் கார்டனில் போடப்பட்டிருந்த காவல்துறை பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

போயஸ் தோட்ட இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தங்கி இருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து காவல்துறை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக அதிமுக தொண்டர்களால் நிரம்பி இருந்த போயஸ் கார்டன் இல்லம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.