தமிழ்நாடு

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச் சடங்கு..!

webteam

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு இறுதிச் சடங்கு தொடங்கியது. 

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று காலமானார். அவரின் இறுதிச்சடங்கானது தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தொடங்கியது. புரோகிதர்கள் பாலசுப்ரமணியத்துக்கான இறுதிச்சடங்குகளை தொடங்க, அவரது மகன் எஸ்.பி.சரண் அவருக்கான இறுதிச்சடங்குகளை செய்து வருகிறார். அங்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாலசுப்ரமணியத்தின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இறுதிச்சடங்குகள் முடிந்த பின்னர் காவல்துறையினரின் உதவியுடன் அவரது உடலானது நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.