தமிழ்நாடு

மத்திய அரசை கண்டித்து செப்.20ல் போராட்டம் - திமுக கூட்டணி கட்சிகள் கூட்டாக அறிக்கை

Veeramani

வேளாண் சட்டங்கள், பெட்ரோல் -டீசல்-எரிவாயு விலை உயர்வுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன.

செப்டம்பர் 20ஆம் தேதி மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் போராட்டம் நடைபெறுமென அறிவித்திருக்கிறது. அவரவர் இல்லங்கள் முன் கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டம் நடைபெறும் என திமுக கூட்டணி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.