பெரம்பலூர்
பெரம்பலூர் pt web
தமிழ்நாடு

பெரம்பலூர் | மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு கதறி அழுத பெண்

PT WEB

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற பெண் திடீரென கீழே விழுந்து கதறி அழுதார். வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண் ஒருவர், தனது வீட்டின் பட்டாவை உறவினர் ஒருவர் தனது வீட்டின் பெயருக்கு மாற்ற முயற்சிப்பதாக கூறி கதறி அழுதார்.

அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்த அந்த பெண் தனது வீட்டை மீட்டுத் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.