தமிழ்நாடு

லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து – ஓட்டுநர் நடத்துனர் உயிரிழப்பு

webteam

பெரம்பலூர் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒட்டுனர் மற்றும் நடத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு என்னுமிடத்தில் திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரா விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், அரசு பேருந்து ஓட்டுனர் தேவேந்திரன் நடத்துனர் முருகன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் காயமடைந்த பயணிகளை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஓட்டுனர் நடத்துனரின் உடல்கள் பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மங்களமேடு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.