தமிழ்நாடு

திருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்..!

Rasus

திருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் அரசு பள்ளிகள் மற்றும் ஏழை மக்களுக்கு 50 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் கரைபுதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில், அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் பா.விஜய், அறம் மக்கள் நலச்சங்கத்தின் நிறுவன தலைவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 30 அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து , பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு  தொழில் சார்ந்த உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் போன்றவை கொடுக்கப்பட்டது. அரசு பள்ளி மற்றும் ஏழை மக்களுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன் , இயக்கத்தின் சார்பில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.