தூத்துக்குடி
தூத்துக்குடி pt web
தமிழ்நாடு

தூத்துக்குடி: சாலைகளில் பெருக்கெடுத்த மழைநீர்; வாகன ஓட்டிகள் அவதி!

PT WEB

குமரிக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சூழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதலே தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் பெருக்கெடுத்தப்படி மழை நீர் செல்வதால் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கின்றன.