தமிழ்நாடு

கேட்பாரற்று கிடந்த முதியவர்கள் - கொரோனா அச்சத்தால் உதவிக்கு முன் வராத பொதுமக்கள்...!

webteam

பழனி பேருந்து நிலையத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கேட்பாரற்று கிடந்த வயதான இருவரை சுகாதாரத் துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றனர்.

பழனியில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர்கள் பரிசோதனைக்கு முன்னர் காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு
சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள பழனி பேருந்து நிலையத்தில் மூதாட்டி ஒருவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு
படுத்துக் கிடந்தார்.

பேருந்து நிலையத்திற்கு வெளியே ஒரு முதியவரும் மூச்சுத் திணறலுடன் அவதியடைந்து வந்தார். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற
அச்சத்தில் அப்பகுதி மக்கள் யாரும் அவர்களது அருகில் சென்று உதவ முன்வரவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சுகாதாரத் துறையினர் இருவரையும் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. உடனடியாக
அவர்கள் இருவரும் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.