எட்டயபுரம்
எட்டயபுரம் PT
தமிழ்நாடு

எட்டயபுரம்: ஒரு வாரமாக அகற்றப்படாமல் இருக்கும் மழைநீர்..? சாலை மறியலில் இறங்கிய மக்கள்!

PT WEB

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை அகற்றும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், எட்டயபுரம் ரோடு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் வெளியே வர வெளியே வர முடியாமலும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மழை நீரை அகற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை கண்டித்து 100க்கும் மேற்பட்ட மக்கள் தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பொதுமக்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.