தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

jagadeesh

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பேரறிவாளன் கடந்த 29 ஆண்டுகளாக சென்னை புழல் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி, அவரது தாய் அற்புதம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உடவ் நலன் காரணம் காட்டி ஏற்கெனவே பேரறிவாளனுக்கு ஒரு வாரம் பரோல் வழங்கிய உச்சநீதிமன்றம் இப்போது மீண்டும் ஒரு வாரம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.