தமிழ்நாடு

திருச்சி விபத்து : பாதிக்கப்பட்டோரை சந்தித்து பாரிவேந்தர் ஆறுதல்

webteam

திருச்சி துறையூர் அருகே கிணற்றுக்குள் வாகனம் விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

பேரூர் கிராமத்திற்கு சென்ற அவர், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முன் பணமாக தலா பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். மேலும் பலியானவர்களின் குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்விக் கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகவும், படுகாயம் அடைந்தவர்களின் மருத்துவச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் விதத்தில், அவர்களை காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதாகவும் உறுதியளித்தார். அப்போது ஐஜேகே கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.