தமிழ்நாடு

நாகை: சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற மகளை கடத்திய பெற்றோர் - தடுத்து மீட்ட பொதுமக்கள்

sharpana

நாகையில் மகளின் காதல் திருமணத்தை பெற்றோர் தடுத்து நிறுத்திய நிலையில், அவர்களிடம் இருந்து பெண்ணை பொதுமக்கள் மீட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் செம்பியம்தேவி கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் திருச்சியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அதே நிறுவனத்தில் பணிபுரியும் கீரனூரைச் சேர்ந்த பாரதியை காதலித்து வந்துள்ளனர். பாரதியும் மதன்ராஜை காதலித்த நிலையில் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

மதன் ராஜ் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாரதியின் பெற்றோர் எதிப்பு தெரிவித்து பதிவுத் திருமணத்தை தடுத்து நிறுத்தி பாரதியை காரில் இழுத்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இதனைப்பார்த்த பொதுமக்கள் பாரதியின் பெற்றோரிடம் இருந்து பாரதியை மீட்டுள்ளனர்.