தமிழ்நாடு

"சொத்தை அபகரிக்க மகன் கொலை மிரட்டல் விடுக்கிறார்” - பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

"சொத்தை அபகரிக்க மகன் கொலை மிரட்டல் விடுக்கிறார்” - பெற்றோர் தீக்குளிக்க முயற்சி

webteam

சொத்தை அபகரிக்க முயற்சி செய்து மகன் கொலை மிரட்டல் விடுப்பதாக வயதான தம்பதியர் மதுரை ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிக்க முயன்றனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஏறம்பட்டியை சேர்ந்தவர்கள் பாண்டியன் - ராஜா பொண்ணு தம்பதியர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான 7 ஏக்கர் விவசாய நிலத்தில் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் சொத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதிதரக்கோரி ஒரே மகனான சந்திரசேகரன் மிரட்டி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தில் உடலி ல்மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச்சென்றனர்.