தமிழ்நாடு

கச்சத்தீவு ஆண்டு விழாவில் தமிழர்கள் பங்கேற்க தடையா? - உரிய நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் கடிதம்

JustinDurai

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் நடைபெறும் ஆண்டு விழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

 கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும் ஆண்டுவிழாவில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்களும் பங்கேற்பது வாடிக்கை என்றும், வரும் 11ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த ஆண்டுக்கான விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவ மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதால், இந்த விவகாரத்தில் தலையிட்டு, தமிழகத்தில் இருந்தும் கச்சத்தீவு ஆண்டுவிழாவில் பங்கேற்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிக்க: பெண்கள் வாக்குச்சாவடிக்குள் திடீரென நுழைந்து ஓட்டுப்போட்ட மர்ம நபர் -தென்காசியில் பரபரப்பு