செய்தியாளர்: விவேக்ராஜ்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பருவத ராஜகுல மக்கள் ஆண்டுதோறும் பழனி தைப்பூச விழாவையொட்டி காவடி எடுத்து செல்வது வழக்கம். அதன்படி 76ம் ஆண்டாக காவடி யாத்திரை இன்று தொடங்கியது. இதில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
முன்னதாக காவிரி ஆற்றில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காவடியுடன் நடனமாடியபடி துக்காம்பாளையத ;தெரு, புதுப்பேட்டை, யானையடி சரவணத்தோப்பு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். இதையடுத்து இன்று இரவு கும்பகோணம் பழையபேட்டை முனிஸ்வரன் கோவிலில் தங்குகின்றனர்.
நாளை காலை பாதயாத்திரையை தொடங்கி சுவாமிமலை, திருவையாறு, தில்லைஸ்தானம், கூத்தூர், பவனமங்கலம், கோவிலடி, திருச்சி, திண்டுக்கல் வழியாக வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) பழனியை சென்றடைகின்றனர்.