தமிழ்நாடு

நெல் அறுவடை: பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த விவசாயி.. வயலில் குவிந்த தன்னார்வலர்கள்

Veeramani

நெல் அறுவடை செய்ய முகநூலில் அழைப்பு விடுத்த விவசாயியின் வயலில் தன்னார்வலர்கள் குவிந்து அறுவடை செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சிங்கிலிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி, பாரம்பரிய முறையில் பயிர் செய்திருந்த தனது நெல்லை அறுவடை செய்வதற்காக  முகநூலில் அழைப்பு விடுத்ததால், அவரின் வயலில் விவசாயிகள் குவிந்து அறுவடை செய்தது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது