தமிழ்நாடு

"மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுக்க நடவடிக்கை எடுத்திடுக" - பி.ஆர்.பாண்டியன் கடிதம்

webteam

மேகதாது அணை கட்டுமான பணிகளை தடுத்து நிறுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனே கூட்டி முதலமைச்சர் விவாதிக்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி ஆர்.பாண்டியன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அவர் இந்தக் கடிதத்தை கொடுத்தார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கட்டுமானப் பொருட்களை கர்நாடக அரசு குவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழக முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.