தமிழ்நாடு

நிரம்பி வழியும் ஏரி! இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கலில் குவியும் வெளிநாட்டு பறவைகள்!

webteam

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பஷ10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் குவிந்துள்ளதால் அதனை காண சுற்றுலா பயணிகளும் குவிந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வேடந்தாங்கல் ஏரியில் நீர் நிறைந்துள்ளது.

இதனால் பாகிஸ்தான், பர்மா, ஸ்ரீலங்கா, சைபீரியா போன்ற பதினாறு நாடுகளில் இருந்து, வெளிர் உடல் அரிவாள் மூக்கன், நத்தக்குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழை கடா, கரண்டிவாயன், தட்ட வாயன், பெரிய நீர்க்காகம் உள்ளிட்ட 26 வகையான பறவைகள் வந்து செல்லும். தற்போது 15 வகையான பறவைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் 10 ஆயிரத்துக்கும் மேல் குவிந்துள்ளன.

வெளிநாடுகளில் இருந்து அக்டோபர் முதல் ஜூன் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் பறவைகளை காண்பதற்காக வெளிநாட்டினர், வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பறவைகள் வரத் தொடங்கியுள்ளது.

பறவைகளை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து கண்டு களித்துச் சென்றனர் அடுத்த மாதம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயத்திர்க்கு வரும் மென வனத் துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.