தமிழ்நாடு

இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்ற தீவிரம்: தேர்தல் ஆணையரைச் சந்திக்க ஓபிஎஸ் திட்டம்

webteam

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை நாளை நண்பகல் 12 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருக்கிறார்.

அதிமுக தலைமைக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள ஓ.பன்னீர்செல்வம், பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி மனு அளித்தார். இதுதொடர்பாக சசிகலா தரப்பு அளித்த விளக்கங்களுக்கு, ஓபிஎஸ் அணியினர் தரப்பில் 61 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தாங்கள்தான் போட்டியிடுவோம் என ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு ஆகிய இருதரப்பினருமே கூறிவருகின்றனர். இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை தனது ஆதரவு எம்பிக்களுடன் நாளை நண்பகல் 12 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க இருக்கிறார்.