தமிழ்நாடு

ஒரு குடும்பத்திடம் சிக்கிய அதிமுக: ஓ.பி.எஸ்

webteam

ஜெயலலிதா எண்ணத்துக்கு எதிராக கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கையில் சென்று விட்டது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று ஆர்.கே.நகரில் அவரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓ.பன்னீர்செல்வம். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தர்மயுத்தங்கள் வெற்றியடைந்ததாகத்தான் வரலாறு உள்ளது என்றார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடக்கும் வரையிலும், சாமானிய அதிமுக தொண்டர்களிடம் கட்சியும் ஆட்சியும் வரும் வரை நமது தர்மயுத்தம் தொடரும் என்றார்.

மேலும், ஜெயலலிதா தனது பிறந்த நாளில் ஏழைகளுக்கு உதவச் சொன்னார் என்று கூறிய பன்னீர்செல்வம், ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா என்றார். இந்த நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் நடிகை பாத்திமா பாபு இணைந்தார்.