தமிழ்நாடு

காதலுக்கு எதிர்ப்பு: காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி

kaleelrahman

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராஜேஸ்வரி என்பவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் பகுதியைச் சேர்ந்த வசந்தன் என்பவரும் கல்லூரி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு ராஜேஸ்வரியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜேஸ்வரி கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனது காதலன் வீட்டிற்கு வந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையறிந்த பெண் வீட்டார் காதல் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து காதல் ஜோடி இருவரும் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.