தமிழ்நாடு

திருச்சியில் நாளை இரவு மட்டும் திறக்கப்படும் வெங்காய மண்டி

jagadeesh

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை இரவு மட்டும் திருச்சியில் உள்ள வெங்காய மண்டி மொத்த விற்பனை நிலையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, வெங்காய மண்டி மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரம்பலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்து, வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, நாளை இரவு பத்து மணி முதல் அதிகாலை 4மணி வரை திருச்சி வெங்காய மண்டி செயல்படும் என வியாபாரிகளின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் 30ஆம் தேதி முதல் வழக்கம்போல் வெங்காய மண்டி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 24ஆம் தேதி முதல் கோவிட் தொற்று பரவலை தடுப்பதற்காக வெங்காய மண்டி மூடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.