தமிழ்நாடு

சுபஸ்ரீ வழக்கு - ஜெயகோபால் மைத்துனர் கைது

webteam

பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் ஜெயகோபால் மைத்துனர் கைது செய்யப்பட்டார்.

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்து ஏற்பட்டு சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்த வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மைத்துனர் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் தலைமறைவாக இருந்து மேகநாதனை காவல்துறையினர் கைது செய்தனர். 

முன்னதாக, சுபஸ்ரீ உயிரிழந்‌த விவகாரத்தில், 15 நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். சென்னையில் தலைமறைவான ஜெயகோபால், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள சொகுசு விடுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரியவந்தது. அவரின் நண்பர் கொடுத்த தகவலின்படி, அங்கு விரைந்த காவல்துறையினர், ஜெயகோபாலை சுற்றி வளைத்து கைது செய்தனர்.