தமிழ்நாடு

கொரோனா நிவாரணம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி

JustinDurai

கொரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று தொழில் துறையினர், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இந்த சந்திப்பின்போது சு.திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, ஜெயக்குமார், கோபண்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.