தமிழ்நாடு

குறைதீர் கூட்டத்‌தில் வீடியோ கேம் விளையாடிய அதிகாரிகள் - விவசாயிகள் அதிருப்தி

webteam

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனில் கேம் விளையாடியது, விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.‌ 

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சிவஞானம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட வேளாண்மை துறை அதிகாரிகள் கூட்டத்தில் கவனம் செலுத்தாமல் தங்களது செல்ஃபோனில் வாட்ஸ் அப் பார்ப்பதிலும், கேம் விளையாடுவதிலும் கவனம் செலுத்தியதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.‌